2011-ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகளில் செய்யூர் (தனி) தொகுதியும் ஒன்று. அச்சரப்பாக்கம் (தனி) தொகுதியை நீக்கி மதுராந்தகம், அச்சரப்பாக்கம் ஆகிய தொகுதிகளில்...
தொகுதியில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் செலவில் சேமிப்பு கிடங்கு, சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வல்லூர் என்ற இடத்தில் பாலம் , பவூஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிதாக 5 தொடக்கப்பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், நூலகம் போன்றவை புதிதாக கட்டித்தரப்பட்டுள்ளன. 3 கால்நடை மருந்தகங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இரும்புலிசேரி-சேவூர் பாலத்தின் குறுக்கே ரூ.12 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ராஜி.
அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தி.மு.க. 1 முறை வென்றுள்ளது
தொகுதியில் செய்யூர் தாலுகா ஆஸ்பத்திரி இருந்தும் தரம் உயர்த்தப்படவில்லை. தொகுதியில் ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரப்படவில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது.